Tuesday, April 2, 2013

வெலிகம பள்ளிவாசல் சம்மேளம் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது!

பொதுபல சேனா இயக்கத்தினர் நாளை பி.ப 2 மணிக்கு வெலிகம பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக மாபெரும் முஸ்லிம் எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளதால் முற்கூட்டியே வெலிகம பள்ளிவாசல் சம்மேளனம் பள்ளிவாசல்களுக்கு அறிவித்தல் கொடுத்துள்ளது.

அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2013 ஏப்ரல் 3 ஆம் திகதி புதன்கிழமை பள்ளிவாசல் ஜமாஅத்தினராகிய ஊரார், அவசியமற்ற தேவைகளுக்காக வெலிகம நகரப் பகுதியிலும், கடற்கரைப் பகுதியிலும் நடமாடுவதை முற்றாகத் தவிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அன்றைய தினம் பி.ப 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தைப் பார்க்கச் செல்வது குழப்பங்களுக்கு வழிவகுக்கலாம் என்பதனாலும், சமூகத்திற்கு வீணான பிரச்சினையை உண்டாக்கும் செயலாக அமையும் என்பதனாலும் எமது இந்தக் காத்திரமான வேண்டுகோளுக்கு இணங்குமாறு அன்பாக வேண்டுகிறோம்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com