Wednesday, April 3, 2013

பாராளுமன்ற சிறப்புரிமையை வைத்துக்கொண்டு வெளியில் நடமாடும் புலி உறுப்பினர்!

புலி உறுப்பினர் ஒருவர் தன்னுடைய பாராளுமன்ற சிறப்புரிமையை வைத்துக்கொண்டு நாட்டுக்குள் நடமாடுவதாக தென்பகுதி சிங்கள பத்திரிகை ஒன்று விசனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடந்த காலத்தில் விடுதலைப்புலி போராளி எனவும், புணர்வாழ்வுக்கு செல்ல வேண்டிய இவர் தற்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக உள்ளதால் தனக்குரிய சிறப்புரிமையை வைத்துக்கொண்டுதான் வெளியே நடமாடுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் புலிகளுடனும் நல்லுறவை பேணி வந்தவர் எனவும புலிகளின் சிரேஸ்ட தலைவர் தீபனின் உறவினர் என புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதுடன் சிறீதரன் சகோதரர் ஒருவர் புலிகளுக்கு ஆதரவான தமிழ்வின் லங்காசிறி மனிதன் ஆகிய இணையத்தளத்தை சுவிட்சர்லாந்தில் இருந்து நடாத்தி வருகின்றார் எனத் தெரிய வந்துள்ளதாக கொழும்பு பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது சுவிட்சர்லாந்தில் இருந்து இணையத்தளத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் பற்றிய தகவல்களையும் புலி எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாகவும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் தனி ஈழ இராச்சியமொன்றை அமைக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

3 comments :

Unknown April 3, 2013 at 4:50 PM  

Unkalukku nilaththin mel aasai. Athuthaan alavukku athikamana nilathai vada kilakku maakaanankalil pirathesa sapa vin keel vaiththu kondu thoonkavum mudiyaamal santhosamum illaamal sinkalavarkal eduppaarkalo muslimkal eduppaarkalo enru ninmathi illaamal avasthai paduvathu kondiruppathu kon munne kaanum unmai. Thanakkullathai koduthu uthavi seiyyum muslim kalai pol illa viddaalum avarkalidam pidunkiya nilathaiyaavathu koduthaal Thookkam unkalukkum varum.

Anonymous ,  April 3, 2013 at 9:24 PM  

தந்தை செல்வா இற்கு அடுத்த தமிழ்மக்களின் தன்னிகரற்ற தலைவராக ஸ்ரீதரனை மக்கள் வழிபட வேண்டும் என நினைக்கும் தம்பி தமிழ்வின் இணைய உரிமையாளரும் , ஸ்ரீதரனின் எடுபிடிகள்
சிலரும் சில புலன்பெயர் தமிழர்களும் செய்யும் முயற்சியே இந்த இணையதள செய்திகள், அவருடைய அலுவலக தாக்குதல் அனைத்தும். அல்லது கிளிநொச்சி அலுவலகத்தில் மாவை, சுரேஷ்
சுமந்திரன், சரவணபவன் போன்றோர் இருக்க இந்த அரைவேக்காடு,
முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளானை கொலை செய்ய யாருக்கு என்ன அவசியம் ? இவரின் முழு குட்டும் விரைவில் அம்பலமாகி விரட்டியடிக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே பலருடைய கருத்து.

Anonymous ,  April 4, 2013 at 10:45 AM  

It is a curse that tamil society never had a proper genuine leader,some or other one after the other creeping into the tamil politics in order lead the society.But the tamil society achieved nothing upto now.But in tamil politics we see guys like this person.How we would say this as a CURSE or as "KARMA" vinai

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com