Wednesday, April 3, 2013

கிளி.உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது அதிகாலை தாக்குதல்.

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருக்கும் உதயன் பத்திரிகை கிளைக்காரியாலயம் மற்றும் பத்திரிகை விநியோகத்தர்கள்,விநியோக வாகனம் ஆகியவற்றின் மீது இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை நான்கு மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகையின் கிளைக் காரியாலயத்திற்கு அதன் பின்புறமாக வந்த முகமூடியணிந்த ஏழு பேர் கொண்ட ஒரு குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த நால்வரில் பொன்ராசா (வயது 57), பிரதீபன் (வயது -28) ஆகிய இருவரும் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இந்த தாக்குதலில் பத்திரிகை ஏற்றி வந்த வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1 comments :

Anonymous ,  April 5, 2013 at 6:37 PM  

இதுவும் ஸ்ரீதரன் என்ற குள்ளநரியின் வேலை தான். கூத்தமைப்பின்
உட்கட்ச்சிப்பூசலின் வெளிப்பாடு தான்.கிளிநொச்சியின் அடுத்த தானைத்தளாபதி தானே என்ற மமதையில் இவர் போடும் ஆட்டம் கொஞ்சநெஞ்சமல்ல. பத்திரிக்கை ஒன்றும் தொடக்கி இருக்கின்றாராம் உதயனுக்கு போட்டியாக. பேராசிரியர் ஒருவர்,
தந்தை செல்வா காலத்தில் இருந்தே தமிழ்தேசியத்துடன் ஒன்றிப்போன திரு . சிவமகாராசா, யாழ்ப்பாண மாநகரசபையை பல்லாண்டுகள் நிர்வகித்து பாராட்டுப்பெற்ற திரு.சிவஞானம் போன்றவர்களை தோற்கடித்து தமிழ்வின் பணத்தால் குறுக்குவழியில் வென்ற சிவஞானம் (சுத்தசூனியம் )ஸ்ரீதரன் என்ற புறம்போக்கு புலி முத்திரையுடன் எவ்வளவு காலத்திற்கு உலா வரப்போகிறார் என்பதயும் பார்ப்போமே.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com