Tuesday, February 5, 2013

எங்கள் தளபதிகளை நாங்கள் மீட்போம். உன்ர வேலையை பாரடா கிழடா! கருணாநிதிக்கு புலிகள்.

இலங்கைத் தமிழரை வைத்து இந்திய பாமரர்களை ஏமாற்றும் டெசோ நேற்று சென்னையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கையில் அடைக்கப்பட்டுள்ள அதிகூடிய குற்றங்களை புரிந்த புலிகளை மீட்பது தொடர்பாக கருணாநிதி பேசியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள புலிகளின் நெடியவன் தரப்பு ஊடகப்பேச்சாளர் ஆதித்தன் மாஸ்ரர் என அழைக்கப்படுபவர் : அதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து தொடர்ந்து கருத்துரைத்துள்ள அவர் 'விடுதலைப் புலிகள் இயக்கமானது தற்போது தந்திரோபாய நடவடிக்கையாக ஆயுதங்களை மௌனித்துள்ளது. புலிகளின் நிகழ்ச்சி நிரலின்படி, ஆயுத மௌனம் கலைக்கப்படும்.

புலிகளின் ஆயுத மௌனம் கலைக்கப்பட்டவுடன் நடைபெறவுள்ள படையெடுப்பில், இலங்கை சிறைகளில் இருந்து புலிகளின் தலைவர்கள் அதிரடியாக மீட்கப்படுவர்.

மற்றையவர்களின் நிகழ்ச்சி நிரலில் விடுதலைப் புலிகள் இயங்கியதாக வரலாறு கிடையாது. புலிகளின் நிகழ்ச்சி நிரலிலேயே அனைவரும் இயங்குவதே நடைமுறை. இதனாலேயே, இலங்கை அரசாங்கமானது, புலிகள் எப்போது தாக்குவார்கள் என செய்வதறியாமல் மிரண்டுபோன நிலையில் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு விடுதலைப்புலிகளின் பல பிரிவுகளில், தற்போதும் நெடியவன் பிரிவுதான் பெரிய அணியாக உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com