Tuesday, December 4, 2012

"தமிழர்கள் என்றுமே வெல்லப்பட முடியாதவர்கள்" சிங்கள மாணவியின் கருத்தால் பரபரப்பு

தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன். இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவியொருவர் டிவீட்டரில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவி யாழ்.பல்கலைக்கழகத்தில கல்வி கற்க வந்த பின்னர் யாழ்.பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு தனது ரிவிட்டரில் பதிவு செய்துள்ள விடயங்களாவன,

நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிச் சொல்லி தமிழ் மாணவர்களை புலிகளாக்கி விட்டிருக்கிறோம். கடந்த 26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.

மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள். தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள்.. அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்..

மாலை 6.05க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன். யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி.

மாணவியின் இக்கருத்து தமிழ் மாணவர்கள் மத்தியிலும் சிங்கள ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 comments :

Anonymous ,  December 4, 2012 at 10:03 AM  

புலிகள் தேவைபடும் போது முக்கிய பெண் புலியாக மாறி ஆனந்தவிகடனுக்கு பேட்டியும் கொடுப்பார்கள். தேவைபடும் போது சிங்கள மாணவியாகவும் மாறுவார்கள். செத்தவர்களை வைத்து பிழைக்கும் கூட்டம்.

Anonymous ,  December 4, 2012 at 1:55 PM  

There is nothing special ,there are many ways to get your popularity.This
is a kind of individuals psychological sickness to get the popularity.Well done lady

Anonymous ,  December 4, 2012 at 2:17 PM  

Very soon she will be on the political platforms of the tamil opportusists.Good luck Madam.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com