Wednesday, November 28, 2012

பல்கலை.ஆர்ப்பாட்டத்தில் கைதான மாணவர்கள் பொலிஸாரால் விடுவிப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான ஆர்ப்பாட்டத்தின் போது ஜந்து மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிடுதலை செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்கள் கைது செய்யப்பட்ட போதும் மாணவர்களின் எதிர்காலம் கருதி விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது மாணவர்கள் கற்களை வீசீ தாக்கியதோடு இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com