Saturday, September 3, 2011

புலிகள் எனப் பெயரை வைத்துக்கொண்டு பூனைகள் போல் பதுங்குகின்றனர். சு.சுவாமி

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் விவகாரம் இந்தியாவிலே அரசியல் ஆக்கப்பட்டுள்ளதா என்ற தலைப்புடன் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று நடாத்திய நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் சுப்பரமணிய சுவாமி இவ்விடயம் அரசியலாக்கப்படவில்லை எனவும் தூக்குத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட விடயத்தில் கருணை கோருவது மானங்கெட்டசெயல் எனவும் புலிகள் என தம்மை தெரிவித்துக்கொள்வோர் ரஜீவ் காந்தியை கொலை செய்தால் அதில் நியாயமிருந்தால் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டியதுதானே, அதைவிடுத்து பூனைகள் மாதிரி பதுங்கி கொண்டு கருணை மனுக்கோருவது வெட்கம்கெட்டசெயல் எனவும் தெரிவித்தூள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com