Thursday, September 15, 2011

5ம் ஆண்டு புலமைப் பரிசில் முடிவுகளில் மூன்று மாணவர்கள் முன்னணியில்.

2011 ஆம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியாக 195 புள்ளிகளை மூவர் பெற்றுக்கொண்டுள்ளனர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் கெக்கிராவ முஸ்லீம் மஹா வித்தியாலய மாணவன் நலீம் பாத்தி மற்றும் மிரிஸ்வத்தை மஹா வித்தியாலய மாணவி நிதிமி ரணவீர, களுத்துறை மகளிர் வித்தியாலய மாணவன் சசிபிரபா பொன்சேகா ஆகியோரே அதிகூடிய புள்ளியாக 195 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

அத்தோடு காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலய மாணவி பாத்திமா ஸீனா (ZEENAA) 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

செய்தியாளர்.ஜீனைட்.எம்.பஹத்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com