Tuesday, October 12, 2010

யாழில் மீள் குடியேறும் சிங்கள மக்களின் நலன்களை கவனிக்குமாறு டக்ளஸ் பணிப்பு.

யாழ் மாவட்டத்தில் முன்னர் வசித்ததாக கூறும் ஒரு தொகுதி மக்கள் அங்கு மீண்டும் குடியேறிவருவதாக தெரியவருகின்றது. மீள் குடியேற விரும்பும் சிங்கள குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்குமாறு அமைச்சர் தேவானந்தா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் 523 சிங்கள குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை அரசியல்மயப் படுத்த வேண்டாமென அவர் வேண்டுதலும் விடுத்துள்ளார்.

அதேநேரம் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது நிலைகாணப்படுவதாக செய்தியொன்று தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com