Monday, September 6, 2010

கிளிநொச்சியில் TriStar ஆடைத் தொழிற்சாலையை நிர்மானிக்கின்றது.

இலங்கையில் ஆடைஉற்பத்தி துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான ட்றைஸ்ரார் அப்பறல்ஸ் தனது தொழிற்சாலை ஒன்றை கிளிநொச்சியில் நிர்மானிக்கின்றது. பிரதேசத்தில் உள்ள யுவதிகளுக்கு வேலைவாய்பினை ஏற்படுத்திகொடுக்கும் நோக்கத்திலேயே அரசின் அனுமதியுடன் இத்தொழிற்சாலை திறக்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com