Friday, June 4, 2010

சீனாவை உடைக்க இந்தியா முயற்சி

இலங்கை மீது சீனா செலுத்தி வரும் ஆதிக்கத்தை உடைப்பதற்கு இந்தியா கங்கணம் கட்டி உடனடியாக செயலில் இறங்கி உள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. அச்செய்திகள் தெரிவிப்பவை வருமாறு:

”சீனா இலங்கையின் இராணுவ பொருளாதார, அரசியல் விவகாரங்களில் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வருகின்றது. சீனா அளவுக்கு இலங்கை விவகாரங்களில் இந்தியாவால் ஈடுபட முடியாமல் போய் விட்டது. இந்நிலையிலேயே இலங்கை விவாரங்களில் காத்திரமான வகையில் பங்கெடுப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா முழு மூச்சாக இறங்கி உள்ளது.

இதன் முதற்கட்டமாக சீபா என்கிற வர்த்தக உடன்படிக்கையை இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பாரதத் தரப்பு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இந்த உத்தேச உடன்படிக்கையின் படி இந்தியர்கள் கணிசமான அளவில் இலகுவாக இலங்கையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியும். குறிப்பாக ஆசிரியர்கள், சட்டத்தரணிகள்,வைத்தியர்கள் போன்ற தொழில் சார் நிபுணர்கள் இலங்கையில் வேலை பார்க்க முடியும். இதனால் இவர்களின் நலன்களைப் பேணுதல் என்கிற போர்வையிலும் இலங்கையின் விவகாரங்களில் பெரிதும் தலையிட இந்தியாவுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. ”

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com