Monday, October 5, 2009

சுவிஸில் புலிகளின் இரு தரப்பினரிடையே மோதல்.

ஒரு தரப்பு புளொட் அமைப்பின் உதவியை நாடியுள்ளனர்.
வன்னியில் புலிகள் இயக்கத்தின் தலைவர் தளபதிகள் உட்பட அனைவரும் கொல்லப்பட்டு அவ்வியக்கம் இலங்கையில் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசத்தில் அவ்வியக்கத்தின் செயற்பாட்டாளர்களிடையே பிளவுகள் பல ஏற்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்ற விடயத்தை உத்தியோக பூர்வமாக மக்களுக்கு தெரியப்படுத்துவதில் புலம்பெயர் புலிகளிடையே ஏற்பட்ட இழுபறி இறுதியில் அவ்வியத்தினுள் உருவாகியுள்ள பிளவை வெளிப்படுத்தியது. கே.பி தரப்பினர், நெடியவன் தரப்பினர் என இரு பிரிவுகளின் கீழ் மேலும் சில உப பிரிவுகளாக அவ்வியக்கம் பிளவுபட்டு நிற்கின்றது.

இப்பிரிவுகளில் கே.பி யுடன் தம்மை படித்த மேதாவிகள் என காட்டிக்கொள்ளும் உருத்திரகுமார் போன்றோரும், நெடியவனுடன் புலிகளின் முன்னணி அமைப்பான ரிஆர்ஓ அமைப்பினரும், யாழ் கரையோர வர்க்கத்தினரும் இணைந்து நிற்கின்றனர். இவர்களில் கே.பி தரப்பினர் புலிகளின் தலைவர் இறந்து விட்டார் என்ற செய்தியை புலிகளின் உத்தியோத கடிதத்தலைப்புடன் அறிவித்திருந்ததுடன், புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்திருந்த கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பிபிசி போன்ற முன்னணி ஊடகங்களுடாக தனது தலைவர் நயவஞ்சகத்தனமாக கொல்லப்பட்டார் என தெரிவித்திருந்தார்.

கே.பி இச்செய்தியை வெளியிட்டமைக்கு எதிராக போர் கொடி தூக்கிய நெடியவன் தரப்பினர் கே.பி யை துரோகி என அறிவித்திருந்துடன் புலிகளின் கடிதத்தலைப்பை பயன்படுத்துவதற்கு கே.பி க்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்திருந்ததுடன், புலிகளின் தலைவர் இறந்துவிட்டதாக கூறப்படும் செய்தி தொடர்பாக உத்தியோக பூர்வமாக மக்களுக்கு எதுவும் தெரியப்படுத்துவதில்லை என்ற தீர்மானத்தில் உள்ளனர். ஆனால் நெடியவன் தரப்பிற்கு ஆதரவாக உள்ள கரையோர பிரதேசங்களைச் சேர்ந்தோர் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு நெடியவன் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது எனவும் அனால் தமது வர்க்கத் தலைவர் பிரபாகரனது இறப்பு அறிவிக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.

ஈழப்போராடம் என புலிகளால் கூறப்பட்ட வன்முறைக் காலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் வழங்கப்பட்ட உதவிகளில் சுவிற்சர்லாந்து நாட்டிலேயே வாழுகின்ற மக்களாலேயே பாரிய உதவிகள் செய்யப்பட்டுள்ளமை கணிப்புகளில் இருந்து வெளிவந்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி புலிகள் நீதி கேட்டபோது, லட்சக்கணக்கான சுவிஸ் பிறாங் வங்கிக்கடன்களை சுவிஸ்வாழ் தமிழ் மக்கள் புலிகளுக்கு எடுத்து வழங்கியுள்ளனர். இவ்வங்கிக்கடன்கள் யாவும் குறிப்பிட்ட மக்களுக்கு வட்டியுடன் திருப்பி கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி புலிகளால் வழங்கப்பட்டிருந்ததுடன் சிலரது கடன்கள் புலிளினாலேயே செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் புலிகளியக்கம் வன்னியில் அஸ்த்தமித்துடன் இங்கு புலிகளால் செலுத்தப்பட்ட வங்கிக்கடன்கள் யாவும் செலுத்தப்படாதுபோக அக்கடன்களை எடுத்துக் கொடுத்திருந்த தனிநபர்கள் அக்கடன்களை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இவ்வாறான பாரிய நிதிநெருச்சலுக்கு உள்ளான மக்கள் சுவிற்சர்லாந்து, சூரிச் மாநிலத்தில் ஜோசப் வீதி எனப்படும் இடத்தில் அமைந்திருந்த புலிகளின் பிரதான காரியாலயத்திற்கு சென்று கலகம் மேற்கொள்ள ஆரம்பித்துடன் அவர்கள் அந்நாட்டு பொலிஸாரின் உதவியையும் நாட முற்பட்டுள்ளனர். நிலைமைகள் மோசமடைவதை அவதானித்த சுவிஸ் புலிகள் அக்காரியாலயத்தை மூடுவதென்ற ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தனர்.

அவ்வாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அக்காரியாலத்தை அகற்றும் வேலைத் திட்டத்தில் அவ்வியக்கத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இறங்கியிருந்தனர். அங்கேயும் பிரதானமான இரு பிரிவுகளான கே.பி, நெடியவன் தரப்பினர் காணப்பட்டனர். புலிகளின் சுவிஸ் பொறுப்பாளராக செயற்பட்டுவந்த குலம் தலைமையிலான குழுவொன்று கே.பி தரப்பினரை ஆதரிப்பவர்களாகவும், நிதிப்பொறுப்பாளாரான அப்துல்லா தலைமையிலான குழுவொன்று நெடியவன் தரப்பினரை ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர். இருதரப்பினரும் தொடர்ந்தும் தமிழ் மக்களை எவ்வாறு ஏமாற்றுவது என்ற கலந்தாலோசனையில் ஈடுபட்டபோது அவர்களிடையே இணக்கப்பாடொன்றினை காண முடியாத நிலைதோன்ற அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதன்போது அப்துல்லா தரப்பினரின் கைஓங்கி குலம் தரப்பினர் நையப்புடைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. அங்கு பொறுப்பாளர் குலத்தின் மேலாடைகள் அனைத்தும் கிழிக்கப்பட்டு மிகவும் கேவலமான நிலையில் அவர் காணப்பட்டதாக இணையத்தளங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் சுவிஸ் புலிகளின் ஒருதரப்பினர் புளொட் அமைபினரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக இலங்கைநெற் இற்கு தகவல் தந்த புளொட் அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவர், புலிகளின் ஓர் பிரிவினர் தமது உதவியை நாடியதை ஊர்ஜிதப்படுத்தியதுடன், தாம் புலிகளின் உள்வீட்டு விவகாரங்களில் எந்தத் தரப்பிற்கும் உதவி புரியப்போவதில்லை என தெரிவித்தாகவும், அத்துடன் பெருந்தொகைப் பணத்தை வாங்கி நடுத்தெருவில் விட்டிருக்கும் தமிழ் மக்களின் கடன் தொல்லைகளை புலிகளின் ரிஆர்ஒ அமைப்பு போன்ற அமைப்புக்களின் வைப்பில் இருக்கும் பணத்தில் நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தியாதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com