Wednesday, September 16, 2009

ஜனாதிபதி மஹிந்தவை சிறைக்கு அனுப்ப பலர் முயற்சித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக இருந்தபோது அவரைச் சிறைக்கு அனுப்புவதற்கு பலர் முயற்சித்தார்கள். ஹம்பாந்தோட்டை சிக்கலை வைத்து அவரை சிறைக்கு அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சியின் பலம்வாய்ந்த அரசியல்வாதி ஒருவரும் மேலும் ஒருவரும் அம்முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் தொடர்ந்தும் அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

இவர்களின் இச்செயற்பாடுகளுக்கு இலங்கை ராஜதந்திர மட்டங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டோர் பலர் உதவி புரிந்து வருகின்றனர். அவர்கள் இந்நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது, மோசடிகள் இடம்பெறுகின்றது எனக் கூறி இலங்கை மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com