Monday, August 31, 2009

பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் பணம்பறிக்கும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்.

கல்கிசை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அப்பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் மாதாந்தம் 15000-25000 பணம் வசூலித்து வருவதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்ட உயர் அதிகாரியின் வசூலிப்புக்கு மாதாந்தம் பணம் கொடுக்க மறுத்த அதிகாரிகள் அப்பிரசேத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்ற அனுமதி மறுக்கப்பட்டு கஸ்டப்பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் மாதாந்த வசூல் பணத்தை கொடுப்பதற்காக பொலிஸ் பொறுப்பதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரிகள், மதுபாணக்கடைக்காரர்கள், பாதாளக்குழுத்தலைவர்கள், விபச்சாரவிடுதிகள் நாடாத்துவோர் மற்றும் இதர குற்றச்செயல்களைச் செய்வோர் பின்சென்று அப்பணத்தை பெறவேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இணையம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com