Thursday, August 27, 2009

இருசிறுமிகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர் பெற்றோர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தை பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட இரு சிறுமிகளும் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். உடல்கள் மீது பிரேதபரிசோதனை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகள் தற்கொலை என தீர்ப்பளித்திருந்தனர். ஆனால் அத்தீர்பினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றறோர் தமது குழந்தைகள் எஜமானர்களால் கொலை செய்யப்பட்டிருப்பதாக திட்டவட்டமாக கூறுவதுடன் நியாயமான விசாரணை ஒன்றை நாடாத்துமாறு வேண்டி நிற்கின்றனர்.

இது தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தமது பார்வையை திருப்பியுள்ளதுடன் புதைக்கப்பட்ட இரு உடல்களையும் தோண்டி மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ள நிலையில் பெற்றோர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ள கருத்துக்களின் ஒளிவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலை பார்வையிட (தமிழ் ) இங்கே அழுத்தவும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com