Monday, August 24, 2009

வன்னி வைத்தியர்கள் பிணையில் விடுதலை.

வன்னியில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கிருந்து சர்வதேச ஊடகங்களுக்கு தவறான தகவல்களை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர்கள் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பிரதி ஞாயிறுதோறும் வவுனியா குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் பிரசன்னமாகி அங்கு கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

தாம் வன்னியில் இருந்து சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்கள் பொய்யானவை எனவும் புலிகளின் வற்புறுத்தலினாலேலே தாம் அவ்வாறான செய்திகளை வழங்கியதாகவும் மேற்படி வைத்தியர்கள் கொழும்பில் நாடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com