Tuesday, August 4, 2009

பெற்றோழுக்குள்ளால் லாம்பு கொண்டு போகும் முஸ்லீம்கள் ( யஹியா வாஸித் )

ஒரு ஊருல, ஒரு சிங்கமும், ஒரு நரியும், ஒரு கழுதையும் நண்பர்களாக இருந்தார்களாம். ஒரு நாள் சிங்கமகாராசாவுக்கு பசியெடுத்து, காட்டுக்குப்போய், ஒரு முயலையும், ஒரு மானையும் வேட்டையாடிக்கொண்டு வந்து, நண்பர்களை கூப்பிட்டு, தான் பிடித்த மிருகங்களை காட்டி எப்படி எனது வலிமை என பந்தா காட்டியுள்ளார். முயலையும், மானையும் கண்ட நரிப்பிள்ளையாருக்கு வாய்க் கொழுப்பேறி, மச்சான் சரியான வேட்டை மச்சான் எனக் கூறி, மானை நீ சாப்பிடு மச்சான், முயல நாங்க சாப்பிடுறோம் என, நரி சொல்லி வாய்மூடுவதற்கிடையில், என்னா, பங்கு கேட்கின்றாயா, நான் கஸ்டப்பட்டு வேட்டையாடிய உணவில் உனக்குப் பங்கா என உறுமி, நரியின் கழுத்துக்கிடையால் ஒரு பிடி பிடித்துள்ளார் சிங்கமகாராசா. நரி. சரி. அப்படியே கழுதைப்பக்கமாக ஒரு திரும்பு திரும்பி எப்படி சவுகரியம் எனக் கேட்டுள்ளார் சிங்கமகாராசா. நம்ம கழுதைப்பிள்ளையார் பின்தலையை கொஞ்சம் தடவி சிறிது யோசித்துவிட்டு, முயல பிறக்பாஸ்ட்டுக்கு வச்சிக்கிங்க, மானை லன்ச்சுக்கு சாப்பிடுங்க, இப்போ நரியும் செத்திடுச்சுல்ல, அந்த நரிய நைட் டின்னருக்கு வச்சுக்குங்க என சொல்லிவிட்டு நடையைக்கட்டியதாம்.

முஸ்லீம்களே நீங்கள் கழுதைகளல்ல. குதிரைகள். பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகளாக கண்கள் கட்டப்பட்டு எங்கேயோ, எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள். பணம், பணம், பணம் என்ற கடிவாளத்தை கெட்டியாகப்பிடித்துக் கொண்டோடிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கண்களை மறைத்துக் கட்டப்பட்டுள்ள சேடத்தை களட்டிவிட்டு கொஞ்சம் வெளியுலகையும் பாருங்கள். இப்படியாகத்தான் எதையோ நோக்கி 30 வருடகாலமாக, தீக்கோழியாக ஓடிய ஒரு நரிக்கூட்டம், அனைத்தையும் தொலைத்துவிட்டு, மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு மீசையில மண்ணொட்டல்ல என ச்சீச்சீ இந்த மகின்தபழம் புளிக்கும் என புராணக்கதை சொல்லிக்கொண்டிருக்கின்றது. பாவம் தமிழ் பேசும் தமிழ் மக்கள்.

ஆனால் சிறிலங்கா முஸ்லீம்கள் யாழ் முருகன்கள் மாதிரி உலகம் சுற்றப்புறப்படாமல், அம்மையப்பன்தானே உலகம், சிறிலங்காதானே நமதுநாடு என்ற பிள்ளையார் தோரணையில் ஐந்து வருடத்துக்கொருதரம் வரம்கொடுக்கும் சிறிலங்காச் சாமிகளை சுற்றிவந்து காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தக்காக்காமார் எங்கதான் படித்தான்களோ இந்த கசமாலங்களையெல்லாம். ஆடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்பதும் இதுதானோ. இங்கு ஒரு குட்டிச்செய்தியையும் சொல்ல வேண்டும். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில், இரண்டாவது இடத்தில் இப்போது இருப்பது நம்ம ஜாதிதானாம் என ஒரு ரகசிய உண்மையான புள்ளிவிபரம் கூறுகின்றது. இன்னும் கொஞ்சம்காலம் இந்த முஸ்லீம்கள் இப்படியே சத்தமில்லாமல் பொதிசுமந்தால், பாரிஜாத குதிரைகளாக ஜாலங்கள் காட்டலாம். சாகசங்கள் செய்யலாம். ஜாம்ஜாமென்று அழகான சிறிலங்காவை ஆளும் கட்சிகளுடன் சேர்ந்து கட்டலாம்.

ஆங்கிலத்தை வணிகமொழியென்றும், கிரேக்கத்தை இசைமொழியென்றும், ஜேர்மனியை தத்துவ மொழியென்றும், இத்தாலியை காதல் மொழியென்றும், லத்தீனை சட்ட மொழியென்றும், பகுத்த புத்திஜீவிகள் தமிழை பக்திமொழியென்று ஏன்தான் பகுத்தார்களோ தெரியாது. இவன் இன்னும் கற்பனைக்கதைகளையே நம்பிக் கொண்டிருக்கின்றான். சோத்துக்கு உப்பு போதாது என பொஞ்சாதியையும், டீக்கு சீனி போதாது என ஹோட்டல் சிப்பந்தியையும் எரிந்து விழும் இந்த தமிழன் முப்பது வருடம் நம் உழைப்பையெல்லாம் தின்று, ஏலம் எடுத்த சூரியதேவனின் கூட்டத்தார் பற்றி மூச்சே விடாமலிருக்கின்றான். அவ்வளவு பக்தி.

இனி புண்ணியம் புலத்தில் செய்து எதுவும் நடக்கப்போவதில்லை. புலத்தில் உண்ணாவிரதம் இருந்த அண்ணாக்கள், சாகும்வரை செத்துடுவோம் என்ற குழந்தைகள், மகின்த கிழிக்கின்றான் என ஓட்டைபானையுடன் ஒப்பாரி வைத்த தாய்க்குலம், அங்க எங்கட தமிழன்கள சிங்களவனுகள் கொல்லுறாங்கோ, அதனாலதான் நாங்கல்லாம் வந்து ஆப்பாட்டம் செய்யிறம் என லண்டன் வெஸ்மினிஸ்டரில் தமிங்கிலம் பேசிய வெள்ளைமனம் கொண்ட கறுப்புக் குழந்தைகள், அய்யகோ புத்திஜீவிகளே உங்கள் கவனத்தை கொஞ்சம் வறுமை ஒழிப்பில் செலுத்தமாட்டீர்களா.

சிங்கள ஆட்சியாளர்களையும், அதற்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகளையும் இப்போது எந்தக்குறையும் சொல்ல முடியாது. அவர்கள் தங்களால் முடிந்ததை, முடியுமானவரை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இல்லையே டக்ளஸ் தேர்தலுக்காகத்தான் பம்மாத்துக்காட்டுகின்றார், கருணா, பிள்ளையான் ஒன்றுமே செய்யவில்லையே என நீங்கள் காட்டுக்கத்தல் கத்த வேண்டிய அவசியம் இப்போதைக்கு கிடையாது. அவர்கள் உங்களைப்போல் படித்தவர்களுமல்ல, படம்போட்டு, கோடுகீறி நாட்டை பிளக்க நினைப்பவர்களுமல்ல. பிழைகள் நடக்கும், நடக்கட்டுமே, தவறுகள் அரங்கேறும், அரங்கேறட்டுமே. தேன் தொட்டவன் கைநக்குவான், நக்கவேண்டும். சூடு மிதிக்கும் மாடு வைக்கோல் தின்ன வேண்டும். தின்னும். தின்னவிட்டால் அது மாடேஅல்ல. ஆனால் உங்களைப் போல் மொத்த சூட்டுக்களரியையும் தின்றுவிட்டு பெப்பே காட்டவில்லை. கேபி அண்ணா, உருத்திரகுமாரண்ணா, நெடியவன் அண்ணா, ரெஜியண்ணா, மொத்த அண்ணாக்களே, பிளீஸ் இப்போது நமது தாய்மார்கள் எல்லோரும் எந்த செல்லடி பயமுமின்றி மூன்று நேரம் உண்ணுகின்றார்கள், பள்ளிக் கூடங்களில் படித்துச் சிறக்க வேண்டிய சிறார்கள் எல்லாம், முள்ளுக்கம்பி வேலிக்குள்ளால் எதையோ தேடுகின்றார்கள். தீட்டுங்கள். திட்டங்களை தீட்டுங்கள், கல்வி, விவசாயம், வீதிப்பராமரிப்பு, தொழில்கல்வி, கந்தக வாசனையற்ற வடக்கு என உருவாக திட்டங்களை தீட்டுங்கள். ஒரு ஐந்து வருடத்துக்கு எங்கள் தமிழ்தாய்களை மூச்சுவிடச் செய்யுங்கள். அப்புறம் வந்து மகின்த மகாராஜாவுக்கு தூதுவிடுங்கள். தமிழர் என்றொரு இனம் உண்டு. அதற்கும் சுவாசிக்க வழியுண்டா என கேழுங்கள். அது துள்ளுற மாடல்ல. ஆடுற மாடு. ஆடிக்கறப்போம். நாங்க நெறய கறக்குறோம். கறப்போம். ஹி லுக் லைக் அ சர்வாதிகாரி. பட் ஹி பிளான் ரு டூ சம்திங். எஸ் ஹி வில் டூ சம்திங் கிறேட் போர் மொத்த தமிழன். வெயிட் அன்ட் சீ.

நிறைய மோடயாக்களும், தொப்பி பிரட்டிகளும், மட்டக்களப்பானுகளும் கைகோர்த்துவிட்டார்கள். வடக்கில் பாரிய ஒரு புறஜக்ட்டுக்கான ( 850 மில்லியன் ருப்பீஸ் ) உரிமையை, ஒரு களுபோவில சிங்களவரும் ( முன்னாள் இராணுவ மேஜர் ), பொத்துவிலை சேர்ந்த ஒரு ஜேர்மன் வாழ்தமிழரும், கல்முனையைச் சேர்ந்த ஒரு லண்டன் வாழ் முஸ்லீமும் கூட்டாக எடுத்துள்ளனர். வேலை எதிர்வரும் 24ம் திகதி தொடங்குகின்றது. இப்படி ஆயிரம் வேலைத்திட்டங்களை மூவினத்தவரும் கூட்டுச் சேர்ந்து தொடங்கிவிட்டனர் புத்திஜீவிகளே. நீங்கள் எப்போது தொடங்கப் போகின்றீர்கள் சகோதரர்களே. நடந்தவைகளை ஒரு கெட்ட கனவாக மறந்து ஒருபுதுயுகம் படைப்போம் இரத்தத்தின் ரத்தங்களே.

மயிலுக்கு மேகத்தால் நடுக்கமில்லை என்று தெரிந்தும், போர்வையை கொடுத்தவன் நம்ம பரம்பரையைச் சேர்ந்தவன் அன்பர்களே, முல்லைக்கு ஒரு மூங்கில் போதும் என்ற போதும், தேரைக் கொடுத்தவனும் நம்மவன்தான் உறவுகளே. வண்டுக்கு செவியறிவு இல்லை என்று தெரிந்தும், மகுடி ஊதியவனும் நம்மவன்தான் அப்பர்களே. அப்படி இருந்தும் ஏன் இப்படி ஒரு ததிங்கிணத்தோம்.

சிறியாணி அக்கா 10 வருடத்துக்கு முன் அனுராதபுரத்தில், நம்மவர்களின் புண்ணியத்தில் அனைத்தையும் தொலைத்துவிட்டு, தம்புள்ள ரோட் நாவலையில் குடியேறுகின்றார். கணவரின் துணையுடன் வீதியோரத்தில் கொட்டில் அமைத்து, அன்று தயிர்சட்டி வியாபாரம் தொடங்கிய சிறியாணி அக்கா, இன்று ஒரு தொழிலதிபர். ஒரு நாளைக்கு 1200 தயிர்சட்டி விற்கின்றார். வீதியோரத்தில் பத்து தயிர் சட்டியுடன் தொடங்கிய சிறியாணியக்காவின் ஒரு நாள் வருமானம் 6000 ஆயிரம் ரூபா, மூத்தமகன் கொழும்பில் எலக்றிசிற்றி போர்ட்டில் வேலைசெய்கின்றார், இளையமகன் கொம்பியூட்டர் இன்ஜினியராக உருவாகிக்கொண்டிருக்கின்றார். சிறியாணியக்கா படித்தது மூணாங்கிளாஸ் மட்டுமே.

சிறிசேன (33) அம்பாரையில் 1997ல் சூரியதேவனின் கோரப்பார்வையில் வெந்து பிழைத்தவர். ரன்தெனிகலையில் 1998இல் விறகு வெட்டியாக தொழிலை தொடங்குகின்றார். அப்புறம், ரன்தெனிகலை அணைக்கட்டுக்கருகில் சிறிய விறகுக்கடை திறக்கின்றார். இப்போது சிறிசேன ரொம்ப பிஸி. ஒருநாளைக்கு 2000 விறகுக்கட்டு விற்கின்றார். அத்துடன் தேங்காய் வியாபாரம். விறகு கட்டு ஆறு ரூபா, தேங்காய் ஒன்று 14 ரூபா. சிறிலங்காவில் எங்கும் இந்த விலைக்கு விறகோ, தேங்காயோ வாங்க முடியாது. சிறிசேன எந்தப்பல்கலைக்கழகத்திலும் வியாபாரத்தத்துவம் படிக்கவில்லை.

சமந்த மல்லி ( 27), வவுனியா பஸ்நிலையத்தில் சுவீப்டிக்கட் விற்றவர். இது எங்கள் பூமி என்பவர்களால், 13 வருடத்துக்கு முன் வவுனியாவைவிட்டு கிளீன் வோஸ் செய்யப்பட்டவர். தப்பினேன் பிழைத்தேன் என நாரஹேன்பிட்டி வந்து கட்டுமாணப்பணி நிறுவனமொன்றில் கூலித்தொழிலாளியாக வேலை தொடங்குகின்றார். இப்போது சமந்த மல்லியின் இரண்டு டோசர்கள் ஹொரவப்பொத்தானையில் வேலைசெய்து கொண்டிருக்கின்றது. மாத வருமானம் பதினைந்து லட்சரூபா, அத்துடன் சமந்த மல்லியின் ஹொரவப்பொத்தானை நிலத்தில் விளையும் மிளகாய், கொழும்பு மெனிங்மார்கட்டில் முதல் இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றது. சமந்தமல்லி எந்த கியுசிக்களிடமும் றெயிங் எடுத்தவரல்ல. அவர் ஒரு கைநாட்டு.

வஹாப்நானா (56 ), 1991 முசலியில் முன்னாலும், பின்னாலும் துப்பாக்கிச் சனியன்களால் அடித்து விரட்டப்பட்டவர். இவரை விரட்டிய, அடித்த நபர் இன்னும் இங்கிலாந்தில், மோர்டன் பகுதியில் வொட்கா ஒரு கையிலும், கள்ளகிறடிட் மட்டை ஒரு கையிலுமாக உலாவருகின்றார். இப்போது வஹாப்நானா கொழும்பு மாழுகடையில் ஒரு பிரபல மீன் வியாபாரி. சிலாபத்திலிருந்து தினமும் ஐந்து லாறி பிறஸ்மீன் வஹாப்நானாவுக்கு வந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது. வஹாப்நானாவின் பிள்ளைகள், ஐரோப்பாவில் குட்டித் தொழிலதிபர்களாக இருக்கின்றனர். வஹாப்நானாவுக்கு முசலியில் பாடசாலைகள் இருந்தது, அங்குபோய் பாடம் படிக்கலாம் என்ற சங்கதி தெரியவே தெரியாது.

ஆனால் எல்லாம் எமக்குத்தெரியும், என்று சொல்லிக்கொண்டு, உலகத்தில் மனிதன் தோன்றியது குரங்கிலிருந்துதான் என்பது உண்மையானால், அதில் முதல் குரங்கு தமிழ் குரங்கு எனப்புறப்பட்டவர்கள் தொப்பியாவாரியிடம் ஏமாந்த குரங்காக தாங்களும் ஏமாந்து, மொத்த தமிழனையும் ஏமாற்றி, இப்போது கே.பி அண்ணா ஒரு முனையிலும், நெடியவன் அண்ணா மறு முனையிலும், நண்பர் ரெஜி ( ரி.அர்.ஓ) நடுவிலும் இருந்து கொண்டு கயிறு இழுப்பதாகவும் காற்றுவாக்கில் செய்திகள் கசிகின்றன. அண்ணாக்களே நீங்கள் என்ன மண்ணாங்கட்டியாவது செய்யுங்கள். எல்லாவற்றையும் புலம் பெயர்நாடுகளில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு வடகிழக்கு மக்களுக்கு நிறைய சோதனைகளும், தேவைகளும் காத்திருக்கின்றது. அவர்கள் அதில் தேற ஓரிரு வருடங்கள் எடுக்கலாம். இடையில் நீங்கள் உங்கள் அதி மேதாவிலாசத்தை காட்டப்போய் இருக்கிற முகாமும் இல்லாமல் செய்துவிடாதீர்கள். இப்போதைக்கு நண்பர் ரெஜியை நான் திட்டவிரும்பல்ல. அவரது உப்பை பலகாலம் தின்றவன் என்பது மட்டுமல்ல. கொஞ்சம் மனிதாபிமானமும், விடயங்களை காதுகொடுத்துக் கேட்கும் பக்குவமும் அவரிடம் இருக்கின்றது.

வடக்கு இனி வாழுமா என கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பார்ப்போமா, ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் கட்டளையாகவே சிலதை சொல்லிவிடலாம். இப்போது சிறிலங்கா பழைய பத்தாம் பசலித்தனமான சிறிலங்கா கிடையாது. சகலவற்றிலும் அடிபட்டு, அடிபட்டு, கொல்லர் பட்டறை இரும்பாக இருக்கின்றது. யாரிடமும் யாரும் கதை சொல்ல முடியாது. பூநரி தாக்குதலில் முன்னணியில் நின்ற இராணுவ வீரனின் மகனும் ( சசிக 12 ) , மகளும் ( சிஹானி 13 ) நாவலப்பிட்டியில் ஒரு தமிழ்தாயிடம் தமிழ் இலக்கணம் படிக்கின்றார்கள். ஆனால் வவுனியா முகாமிலுள்ள சில தமிழ் குழந்தைகளுக்கு தமிழே எழுதத்தெரியவில்லை. ஆனால் நாம் தமிழை வளர்க்கப்புறப்பட்டவர்கள், அவர்கள் தமிழை அழிக்கப்புறப்பட்டவர்கள் என பழைய புராணம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

இன்னும் ஓரிரு வருடங்களில் சிறிலங்காவில் இரண்டாவது பெரும்பான்மை கிட்டத்தட்ட முஸ்லீம்கள்தான் என்பதை அடித்துச் சொல்கின்றோம். சிறிலங்கா முழுதும் உள்ள பாடசாலைகளில் 90 வீதமானவற்றில் தமிழ் படிப்பிப்பவர்களும் முஸ்லீம்களே. வீரகேசரியும், தினக்குரலும் வாசிப்பவர்களில் 85 வீதமானவர்களும் முஸ்லீம்கள்தான். சிறிலங்காவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 33 வீதத்தை ஓள்றெடி காக்காமார் விலையாக வாங்கிவிட்டதாக ஹெல உறுமயக்காறர் கிசுகிசுக்கின்றனர். மைகோட் வட் இஸ் கோயிங் ஒன். ஐ டோன்ற்ட் நோ. சம்திங் கோயிங் ஒன் அன்டர் த பெற்றோள். தென் வை சம் சிறிலங்கன் டமிள் பீப்பிள் டூயிங் ஹர்த்தால் அன்ட் ஆர்ப்பாட்டம் இன் யுரோப். தே ஆர் யுரோப்பியன்ஸ். தே என்ஜோய் நடைபயணம், கடையடைப்பு அன்ட் மணிகலக்சன். ஓ ஐசீ. ஹவ் திஸ் முஸ்லீம் பீப்பள் டெவலப் லைக் திஸ். அடி. மரணஅடி. எதிர்பார்க்காத நேரத்துல, எதிர்பார்க்காத எடத்தில, சொந்த உடன்பிறவா சகேதரர்களிடமிருந்து விழுந்த மரணஅடி. அவனுக்குள் நிறைய பிரளயத்தை எற்படுத்தியது. ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஓ மை கோட். கோட் இஸ் கிறேற்.

கிழக்கு மாகாணம் முதலமைச்சர் பிள்ளையானையும், அமைச்சர் கருணா அம்மானையும் கொஞ்சம் திட்டத்தான் வேண்டியுள்ளது. போதாது, போதாது. உங்கள் வேகம் போதவே போதாது. பொத்துவில் பாணமை முதல் கிரான், மன்னம்பிட்டிவரை

பிரதான வீதியால், உங்கள் பஜிரோக்களை 30 கிலோ மைல் வேகத்தில் செலுத்தி, வீதியின் இருமருங்கையும் ஒரு நோட்டமிடுங்கள். உடுக்கையிழந்தவன் கைபோல, போலியோ வந்த சிறுமிகள் மாதிரி அத்தனை தமிழ் கிராமங்களும், இன்னும், இன்றும் சோபையிழந்து காணப்படுகின்றன. கிரானில் உள்ள ஒரே ஒரு ஆச்சிரமத்தை தவிர அத்தனை தமிழ் கிராமங்களும் வேலிகூடயின்றி பரிதவிக்கின்றன. ஆனால் அத்தனை முஸ்லிம் கிராமங்களும், சூரன்போர் தீர்த்தக்களரி மாதிரி ஜொலிக்கின்றன. ஏன். பாரிய முதலீடுகளில்தான் கவனம் செலுத்துவீர்களா. பாமரமக்கள் என்ன வக்கற்றவர்களா. சகோதரர்களே ஏழையின் சிரிப்பில்தான் பரமாத்மாவைக்காணலாம். தட்டுங்கள். பிளீஸ் ஏழைகளின் கதவுகளைத்தட்டி அவர்களையும் கனாக்காணவிடுங்கள். நோ கற்பனை.

தொல்காப்பியம் தொன்மையின் அடையாளம், திருக்குறள் வாழ்வியல் அடையாளம், ராமாயணம் புலமையின் அடையாளம், பெரியார் இன உணர்வின்அடையாளம், காமராஜர் அரசியல்அடையாளம் என பெருமை பேசிய தமிழனை, சிறிலங்காத்தமிழன் அகதியின் அடையாளம் என மாற்றி விடாதீர்கள். அவன் ஒரு பீனிக்ஸின் அடையாளம் என உலகம் சொல்ல வேண்டும். அது ஆரோக்கியமாக சாம்பலுக்குள் இருந்து புறப்பட வேண்டும்.

( 05-08-2009 )

3 comments :

Kujaan August 5, 2009 at 10:58 AM  

tamils will not develop untill 100years by like this kind of writters. pls dont compare with other community try to become good. neenge seitha aniyayethulathan muslimkal munnerinange neenge now 33year back. muthalle ungadaye kaluwunge!

senathirasa August 5, 2009 at 4:36 PM  

சிங்களவர்களைப் பார்த்து பொறாமைக் கண்களுடன் எழுதி முடிந்தது போலும்!
இப்போது, முஸ்லிம்களை நோக்கித் திரும்பியுள்ளது! வாழ்த்துக்கள்!

பொறாமையுணர்ச்சியுடனும் காழ்ப்புணர்ச்சியுடனும் இன்னொரு சமூகத்தை நோக்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்!

பழிப்பவன் பழிக்கப்படுவான் என்பது, யேசுவின் பொன்மொழி.

Unknown August 5, 2009 at 4:36 PM  

I appreciate the previous comments given by a Tamil brother. Please don’t publish this kind of article. Enough is enough. Try to promote understanding between Tamil and Muslims. I am a evicted Northern Muslims who has been suffering for 19 years. Still we are waiting for return and live with Tamil brothers in North.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com