Friday, July 10, 2009

புலிகளின் மதி உரைஞர் குழு நோர்வே யில் ம(த)ந்திர ஆலோசனை.


நோர்வேயில் இன்று பிற்பகல் 5 மணிக்கு விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவினரின் மத்திய குழுக் கூட்டம், புலிகளின் நோர்வே தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. தமிழீழ மக்கள் பேரவை என்ற பெயரில் பற்றிமாகரன் என்பவரை தலைமையாக கொண்டு இயங்கிவரும் புலிகளின் முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கே.பி க்கு எதிரான நெடியவன், ரி.ஆர்.ஓ ரெஜி ஆகியோரது பிரிவினர் இங்கு பங்கு கொண்டுள்ளதுடன் தாமும் தொடர்ந்து தமிழீழ மக்கள் பேரவையின் கீழ் இயங்குவதென முடிவெடுத்துள்ளனர்.

அதே நேரம் நேற்றயதினம் கே.பி குழு வினரின் செயற் குழு கூட்டம் நோர்வேயில் இடம்பெற்றுள்ளதுடன், இக்கூட்டத்தின் போது நோர்வேயில் இயங்குகின்ற அன்னை பூபதி பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பை கே.பி குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளாக தெரியவருகின்றது. இப்பாடசாலை நெடியவன் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு இப்பாடசாலையின் பொறுப்பாளராக இருந்துவந்த யோகராஜா பாலசிங்கம் என்பவர் கடந்த சில நாட்களாக நோர்வேக்கு வெளியே சென்றுள்ள நிலையில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது. அவர் கே.பி குழுவின் அச்சுறுத்துலக்கு அஞ்சி அல்லது எதிர்காலத்தில் கே.பி குழுவுடன் இணையும் நோக்கில் நெடியவன் தரப்பினருக்கு கம்பி நீட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com