Friday, July 17, 2009

புலிகள் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் எகிப்து செல்ல முற்பட்ட வேளை பண்டாரநாயக விமானநிலையத்தில் கைது.

வெள்ளவத்தை மற்றும் கொட்டகேன பிரதேசங்களை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட விடுதலை புலிகள் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் எகிப்து செல்ல முற்பட்ட வேளை பண்டாரநாயக விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். எகிப்தில் இடம்பெறும் அணிசேரா மகாநாட்டில் கலந்துகொள்ள சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவர்கள் ஏகிப்து செல்ல முற்பட்டனரா என்று பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சாவகச்சேரி மற்றும் பலாலி பிரதேசங்களை பிறப்பிடமாக கொண்ட விஸ்வசாமி கிருஸ்ன பிரசாத் மற்றும் கலீபன் என இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு விசாபெற உதவிசெய்த சசிதரன் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com