Tuesday, June 30, 2009

நோர்வே தமிழ் ஆலயம் பொலிஸாரின் கண்காணிப்பில். புலிகள் மிரட்டல்.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கிவரும் சிவசுப்பரமணிய ஆலயம் அந்நாட்டு பொலிஸாரின் கண்காணிப்பில் வந்துள்ளதாக தெரியவருன்றது. புலிகள் அவ்வாலயத்தின் நிர்வாகத்தினருக்கு விடுத்த மிரட்டலையடுத்து நிர்வாகத்தின் ஒருதொகுதியினர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே இந்நிலை உருவாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல முக்கிய விடயங்கள் ஒப்புதல் வாக்குமூலமாக நிர்வாக அங்கத்தினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தாம் புலிகளின் மிரட்டலுக்கு உள்ளான விடயத்தை ஆதாரப்படுத்தும் விடியோக்களும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் வழங்கியுள்ள ஒப்புதல் வாக்கு முலங்களில் சுவிற்சலாந்து நாட்டிற்கு கோயில் நிதியில் இருந்து அனுப்பட்ட 10 லட்சம் நோர்வே குரோணர்கள் புலிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே அனுப்பப்பட்டதாகவும் அப்பணத்தை அனுப்புமாறு புலிகளின் நோர்வே பொறுப்பாளர் முகிலன் தலைமையில் சென்ற குழுவினர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தினரின் ஒப்புதல் வாக்குமூலத்தை தொடர்ந்து ஆலய வங்கிக்கணக்கு மற்றும் நிதிப் பரிமாறல்கள் நோர்வே உளவுப் பிரிவினரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாக தெரியவருகின்றது. புலிகளியக்கத்தின் பயங்கரவாத செயல்களுக்கு தமது நாட்டில் இருந்து மேலும் நிதியுதவி செல்வதை தடுக்கு முகமாக நோர்வே பொலிஸார் புலிகளின் சகல செயற்பாடுகளையும் செயலிழக்கச் செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com