Saturday, June 6, 2009

யாழ் படையினரின் தோட்டா களஞ்சியம் தீப்பற்றி எரிந்துள்ளது.

யாழ் மயிலிட்டியில் உள்ள இராணுவத்தினரின் தோட்டா களஞ்சியம் தீப்பற்றி எரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று காலை பலாலி இராணுவ பாதுகாப்பு வலையத்திற்குட்பட்ட மயிலிட்டி பிரதேசத்தில் உள்ள எமது சிறியதோர் தோட்டா களஞ்சியம் தீப்பற்றி கொண்டுள்ளது. தற்போது தீ அணைக்கப்பட்டு நிலைமைகட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற அவரிடம் சேத விபரங்கள் பற்றி கூற முடியுமா? என கேட்டபோது, இது ஓர் சிறிய சம்பவம் குறிப்பிடத்தக்க சேதங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக எவ்வித சந்தேகங்களும் இல்லை எனவும் இது ஓர் எதிர்பாராத விபத்து எனவும் தெரிவித்த அவர், விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்ற விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com