Wednesday, June 3, 2009

அக்காசி மீண்டும் இலங்கை வருகின்றார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கான ஜப்பான் சமாதான தூதர் யசூசி அக்காசி எதிர்வரும் 8ம் திகதி இலங்கை வருகின்றார்.

அவர் இலங்கையில் நான்கு நாட்கள் தங்கியிருந்து அரச மற்றும் எதிர்கட்சி உட்பட்ட அனைத்துக்கட்சி அங்கத்தவர்களையும் அரச அதிகாரிகளையும் சந்தித்து இலங்கையில் இடம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் வாழ்கைத்தரத்தை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பவுள்ள அவர் இலங்கை விடயங்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என ஜப்பான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது அக்காசியின் இலங்கைக்கான 18 வது விஜயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com