Tuesday, June 16, 2009

புலிகளின் பாசையில் யார் தியாகிகள் ?

சேதுவுக்கு அடி, புதினம் பிளைப்புக்கு புலிச்சாயலாம், சண்தவராசா துரோகியாம், ஜிரிவி விலை போட்டுதாம்.

புலிகளுள் உருவாகியிருக்கும் உள்முரண்பாடுகள் புலிகளுள் இருந்த துரோகிகளை இனம் காட்டுவதுடன் தாமாகவே இத்தனை காலமும் மக்களுக்கு செய்து வந்த துரோகங்களை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரபாகரனின் மரணத்தின் பின்னர் தலமையை தமது கையில் எடுத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் புலிகளுக்கும், பிரபாகரனது பெயரால் மாத்திரமே தம்மால் மக்கள் முன் நிற்க முடியும் என எதிர்பார்க்கும் புலிகளுக்கும் இடையில் ஊடகச் சமர் ஆரம்பமாகி இரு தரப்பு வண்டவாளங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதன் வெளிப்பாடாக புதினம் இணையத் தளத்தில் பிரபாகரன் இறந்து விட்டார் எனும் விடயத்தை வெளிப்படுத்திய வழுவி எனும் பெயரில் முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! எனும் கட்டுரை ஒன்றை எழுதியவர் தொடர்பாக, சிறிலங்கா புலனாய்வுப் பிரினர் அறிந்திராத செய்திகளை புலிகளின் தலமைக்காக அடிபடும் ஒரு தரப்பினர் மாற்று கருத்துக்களை வெளிக்கொணரும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் அனுப்பி வைத்துள்ள தகவல்களில் சிலவற்றை கிழே தருகின்றோம் :


வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மோசடி செய்தமை போன்ற காரணங்களினால் தமிழ்ச்செல்வன் இவரை தன்னுடன் பணிக்கு வைத்திருக்க முடியாது என வி.பு தலைமைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைப்பீடம் புலனாய்வுத்துறையிடம் பரந்தாமன் (வழுதி) பற்றி விளக்கம் கேட்டது. பரந்தாமன் (வழுதி) பற்றி முழுமையான விசாரித்தும் பின்தொடரும் பணியிலும் இருந்தவர், புலனாய்வுத்துறை சார்ந்த அதியமான்.

இவர் தனது அறிக்கையில் தமிழ்ச்செல்வன் கூறியவையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது தமிழ்ச்செல்வன் குறிப்பிடாத பல செய்திகளையும் தலைமைக்கு தெரிவித்தார். அத்தோடு இவரை மேலும் இயக்கத்தில் அனுமதிக்க முடியாமைக்கு உரிய காரணங்களையும் குறிப்பிட்டார்.

இவருக்கான தண்டனை பற்றி தலைமைபீடம் யோசித்து வந்தபோது. தலைவர் குறுக்கிட்டு இவர் நீட்ட காலம் பணியாற்றியமையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையுடன் இவரை இயக்கத்தில் இருந்து நீக்கி செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார்.

ஆனால் சிறீலங்கா தவிர்ந்த ஏனைய நாட்டில்தான் பரந்தாமன் ஐந்து ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வழுதியின் வேண்டுதலுக்கு இணங்க இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் தலைவர்.

நாட்டை விட்டுவெளியேறியதும் பரந்தாமன் என்ற வழுதி மேற்கண்டவர்கள் மேல் வக்கிரம் கொள்ள ஆரம்பித்தார்.

இவ்வளவு சம்பவங்களும்தான் வழுதி (பரந்தாமன்) புதினம் இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை விமர்சிக்க காரணமாக இருந்தது.

புதினம் இணையத்தளம் இக்கட்டுரையை ஏன் வெளியிட்டது....

புதினம் இணையத்தளம் அவுஸ்திரேலியாவில் இருந்து கரன் என்பவரினால் இயக்கப்பட்டுவருகின்றது. இவர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் கிடையாது. இவர் சார்திருக்கும் நபர்களில் பெரும்பாலனவர்கள்
புலி எதிர்ப்பாளர்கள். அவரின் முக்கிய நண்பவர்கள் சிலர் விவரம்

அவ் மின்னஞ்சல் மூலமாக தனிநபர்கள் தொடர்பாக அனுப்பப்பட்ட தரவுகளை தற்போது தவிர்த்துக் கொள்கின்றோம். அத்துடன் புதினம் எனும் இணையத்தளம் தொடர்பாக எழுதப்பட்டிருந்த விடயங்களை தணிக்கை செய்துள்ளோம்.

மறு புறத்தில் புலிகளின் சுவிஸ் கிளைப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் சார்பாக பல தரப்பினருடனும் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவருமான நபரொருவரை புலிகளது நெருடல் இணையத்தளம் துரோகியெனக் குறிப்பிட்டுள்ளது. அதில் அவர் புலிகளது எவ்வித ஒப்புதலும் இல்லாமல் சுயமாக அறிக்கைளை விடுவதாகவும் அவர் வெளிநாட்டு உளவு அமைப்பொன்றிற்கு துணைபோயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபர் காலம் காலமாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்த ஜனநாயகவாதிகளை துரோகிகள் என குறிப்பிட்டு வந்திருந்தார். ஆனால் அவர் இன்று புலிகளாலேயே துரோகியாக்கப்பட்டுள்ளார்.

புலிகள் இதுவரை காலமும் தமக்கு வேண்டாதவர்கள் மீது எவ்வாறான பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள் என்பது தற்போது அவர்களது உள்வீட்டு பிரச்சினையின் போது இடம் பெறுகின்ற கல்லெறி பொல்லெறிகளில் இருந்து உணர முடிகின்றது. VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com