Wednesday, June 24, 2009

சாக்கிரதை, சாக்கிரதை, தொப்பி மாத்திகள் ஜாக்கிரதை. யஹியா வாஸித் ( வேப்பங்குளத்திலிருந்து )

முதல்தான் எதுக்கெடுத்தாலும் சோனி தொப்பி மாத்திட்டான்டா, சோனி தொப்பி மாத்திட்டான் என்பார்கள். இப்ப என்னடா என்றால் எல்லோருமே தொப்பி மாத்த தொடங்கி விட்டார்கள். அதுவும் நம்மட ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க, ராஜ கம்பீர, உலக மகா சூரர்களும் தொப்பி மாத்த தொடங்கி விட்டார்கள். நம்ம எம்பி கிஷோர் சாகேப் தொப்பி மாத்திட்டாராம், குதிரை கஜேந்திரன் அண்ணா எப்படி மாத்துவதென தெரியாம தொப்பியை களட்டி வைத்துள்ளாராம்இ தோழர் சுரேஸ் ஹி..ஹி..ஹி...ஓள் றெடி டண் என்றுதான் சொல்கின்றார்கள்.

கியூசிக்கள், ட்ரயல் அட் பார் பரம்பரையில் வந்த மற்றவர்களும், அது, வந்து நாங்க புலி சொன்னதற்காகத்தான் இவ்வளவும் செய்தோம் என முந்தா நாள் பத்திரிகை ஒன்றில் தொப்பி மாற்றியுள்ளார்கள். மாவை சேனாதிராசாண்ணா கடல்கடந்த தமிழீழமா, எங்களுக்கு யாரும் சொல்லலையே என தொப்பி மாத்தியுள்ளார். பொட்டண்ணா ஏசீ றூமில் சகல சௌகரியங்களுடனும் இருந்து கொண்டு நிமிடத்திற்கொருதரம், தொப்பி மாற்றுவதாக நம்பத் தகுந்த கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் குசு குசுக்கின்றன.

இளையோர் ஜின்னாத் தொப்பியுடனும், ஆய்வாளர்கள் குல்லாத் தொப்பியுடனும், வசூல் மன்னர்கள் துருக்கித் தொப்பியுடனும், நம்முட ஒலி,ஒளி பரப்புக்காறர்கள் சேகுவேராத் தொப்பியுடனும் உலா வருகின்றனர்.

ஜின்னாத் தொப்பி இரண்டு முனைகள் கொண்டது. நேரு தொப்பி என்றும் சொல்வர். ஒரே ஒரு முறைதான் திருப்பலாம். அல்லது மாத்தி போடலாம். இளையோர்களெல்லாம் ரொம்ப புத்தி சாலிகள். இன்னும் இந்தக் குழந்தைகளுக்கு வன்னி புராணம் தெரியாது. மொத்த உண்மையும் தெரிந்தவுடன்தான் இவர்கள் தொப்பியை மாத்திப் போட்டு கே.பி.அண்ணாவிடம் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள் என நினைக்கின்றோம்.

குல்லாத் தொப்பி ரொம்ப ராசியானதும், சுகமானதும், தலையிலும் போட்டுக்கலாம், கொஞ்சம் இழுத்து இரு காதுகளையும் சேர்த்து மாத்தியும் போர்த்திக்கலாம். அதுவும் முடியாவிட்டால், இன்னும் கொஞ்சம் ஜவ்வுமாதிரி இழுத்து முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டு கம்முணு தூங்கிடலாம். எப்படி எப்படி எல்லாம் தமிழனை இழுத்து கதை சொல்ல முடியுமோ, கதை கதையாக சொல்லி இப்போ மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் அற்லீஸ் முழுங்கவும் முடியாமல், நன்றாக குல்லாவை மாற்றி இழுத்து மூடிக்கொண்டு ஆய்வாளர்கள் எல்லோருமே தூங்குவதாகக் கேள்வி.

துருக்கித் தொப்பி, இது வெல்வெட் துணியினால் செய்யப்பட்ட சிவப்புக் களர் தொப்பி. கறுப்புக்களர் குஞ்சம் ஒன்று தேமே எனத் தொங்கிக் கொண்டிருக்கும். இடத்துக் கேற்ற மாதிரி இதை திருப்பி திருப்பி போடலாம். மொத்த வசூல் சக்கரவர்த்திகளும் மாத்தி, மாத்தி கதை சொல்லிஇ சொல்லி வசூலித்தார்கள். அடக்கி வாசிக்க வேண்டிய இடத்தில் அடக்கி வாசித்தும், அடாவடி பண்ண வேண்டிய இடத்தில் அடாவடி பண்ணியும், உறும வேண்டிய இடத்தில் உறுமியும், கனைக்க வேண்டிய இடத்தில் கனைத்தும் காரியத்தை சாதித்தார்கள். இப்போ துருக்கித் தொப்பியை, குஞ்சத்தை அகற்றிவிட்டு அணியலாமா என இவர்கள் யோசிப்பதாகவும் கேள்வி.

சேகுவேராத் தொப்பி. ரொம்ப கம்பீரமானது. இதை போட்டால் இராணுவ மிடுக்கு தெரியும். மே 16 இரவு மிட் நைட்வரை, இந்த ஒலி, ஒளி பரப்புக்காறர்கள் காட்டிய பந்தா இருக்கிறதே அட போங்கப்பா, அப்படியே மொத்த தமிழனையும் கதிரை நுனிக்கு கொண்டு வந்து உட்கார வைத்து விட்டு, அடுத்த நாள் காலையில் தொப்பியை களற்றி மாத்திப் போட்டுக்கொண்டு, றெக்கார்டிங் றூமில் இருந்து உலகப் பொருளாதார வீழ்ச்சி பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தம்பி கதிர்காமத்தம்பி அறிவழகன், இவரது அறிவு அவ்வளவு அழகாக இருக்குமா இருக்கும்இ அதனால்தான் தல இறந்துஇ பல நாட்களுக்கப்புறம்இ எங்கடவர் இறந்து போயிட்டாராம் என்று, அழகாக தொப்பி மாத்தி புலனாய்வு செய்துள்ளார். ஜேர்மன் அண்ணா வாகீசன், இன்னும் ஒரு படி மேலே போய், கேபி அண்ணாவுடைய தொப்பி சரிவராது நாங்க ஹிட்லர் தொப்பிதான் அணிவோம் என முந்தா நாள் ஊரைக்கூட்டி ஜேர்மனியில் உபதேசம் செய்துள்ளார்.

இராஜதந்திரப்போர், அகிம்சைப்போர் எல்லாம் கறிக்குதவாதுஇ ஆயுதப்போர்தான் இறுதி முடிவு என்று 30 வருடமாக தமிழனை கறிவேப்பிலை ஆக்கியவர்கள், இனி இராஜதந்திரப் போர்தான் முடிந்த முடிவு என மொத்தமாக தொப்பியை மாற்றியுள்ளனர். மாத்துங்கோ, மாத்துங்கோ, சந்கோஷமாக மாத்துங்கோ. இனியாவது ஒரு விதிசெய்வோம் மாத்துங்கோ.

எல்லா படையணிகளும் உடைந்தாலும், சூசையண்ணாவின் கடற்புலி அணி சிங்களத்துக்கு முக்காபுலா பாடுவார்கள் என்று சொன்ன ஆனந்தவிகடன் காறனும் தொப்பிய மாத்திட்டான். இப்போ அவனுகளும் கேபி அண்ணாவின் நாடுகடந்த தமிழீழம் சிங்களத்துக்கு முகாரி பாடும் என சொல்லி சேர்குலேசனை கூட்டத் தொடங்கிவிட்டார்கள். நடக்கட்டும், நடக்கட்டும், ஒங்கட மஞ்சள் பத்திரிகை வியாபாரம் நன்றாகவே நடக்கட்டும்.

கைது செய்யப்பட்டு கோர்டில் ஒப்படைக்கப்பட்ட அந்த கெயார் ஹோம் பணியாளர்களும் தொப்பி மாத்திட்டாங்களாம். ஆமா சத்தியமாக நாங்க வெடிபொருட்களை கெயார்ஹோம் வாகனங்களில் கொண்டு வந்தோம் என தொப்பி மாத்தியுள்ளார்கள்.

அந்த வேப்பங்குளம் முகாமில் ( வன்னி பல்கலைக்கழக வளாகம் ) மிக மிக பாதுகாப்பாக உள்ள அந்த 2873 மனிதப் புனிதர்கள் பற்றி கொஞ்சம் பதறத்தான் வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் அவர்கள் ஐந்தறிவு மிருகங்களாக வளர்க்கப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா என்றதொரு நாடு இருக்கின்றது, அதன் தலை நகர் கொழும்பு என்ற சங்கதி அந்த மகாத்மாக்களில் 635 பேருக்கு தெரியவே தெரியாது. தல, தல, தல அது பற்றித்தான் அவர்களுக்கு பாடம் நடாத்தப்பட்டுள்ளது. இவர்களை மனிதர்களாக மாற்ற பல வருடங்கள் எடுக்கலாம். அதற்கிடையில் விபரம் தெரிந்த, விபரம் புரிந்த பலர் அரசுக்கு ஆதரவாக தொப்பி மாத்திவிட்டதாக கிளி ஜோசியர்கள் சொல்கின்றார்கள்.

இவையெல்லாம் பார்க்கும் போது எல்லாமே பெரிய ராஜதந்திரம் போலதான் கிடக்கிறது. தொப்பி மாத்துவதென்றால் சும்மாவா. இது ரொம்ப பெரிய ராஜதந்திர தொப்பி மாத்தல். அப்போ டக்ளஸ் மாறியது. அது கோடரி காம்பு, கருணா மாற்றியது. அது எட்டப்பன். அஸ்றப் ஹாஜியார் மாத்தியது, அவன் காக்கா. அப்போ கிழக்கு மாகாணத்தான் மாறியது, அது சிங்களத்துக்கு சோரம் போன தேவடியாள்தனம். அட நாச மறுவார்களே ! அப்போ இப்போது நீங்கள் நாடு நாடாக, கூடிஇ கூடி மாற்றுகின்றீர்களே ! அது என்ன ராசா. அது எங்கள் ராஜ தந்திரம், எங்களது போராட்டத்தின் இன்னொரு பரிமாணம்.

மாத்துங்கோ, மாத்துங்கோ. நல்லா தொப்பி மாத்துங்கோ. இன்னும் கொஞ்சம் தொப்பி எங்களிடம் இருக்கிறது. குரங்குத் தொப்பி, நரித்தொப்பி, பங்சோந்தி தொப்பி, சர்க்கஸ் பபூன் தொப்பி. தொப்பி வாங்கலையோ தொப்பி. இந்த தொப்பி அணிந்து கொண்டால், புலன் பெயர் தமிழனை ஜாலியா ஏமாத்தலாம். தமிழ் வாசிக்கத் தெரியாத இளையோரை ரொம்ப பதவிசாக பூச்சுத்தலாம். வாழ்வைத் தொலைத்த 3லட்சம் வன்னித் தமிழனை வக்கனையாக விலை பேசலாம். வாங்கோ, வாங்கோ தொப்பி வாங்குங்கலையோ தொப்பி.

வாங்கி, தொப்பிய வாங்கி சந்தோஷமாக மாற்றுங்க, வணங்கா மண், நாங்கள் யாருக்கும் வணங்க மாட்டோம் என வெறித்தனமாக பெயர் சூட்டாமல், கும்புர்ரோமுங்கோ என்று பெயரை சூட்டி அதே கப்பலை பெயரை மாத்தி அனுப்புங்க, ஆயிரம் கைகள் அதை அரவணைக்கும். இன்று எத்தனை கும்புடு போடுகின்றீர்கள் இந்த வணங்கா மண்ணுக்காக, சிறிலங்கா அரசை ஒரு கும்பிடு, ஹாபரில் நிறுத்தமுடியாமல், கடற்படையிடம் ஒரு கும்பிடு, தமிழ் நாட்டு அரசிடம் ஒரு கும்பிடு, குடிக்க தண்ணி தாங்கோ என மெட்ராஸ் ஹாபரில் ஒரு கும்பிடு, மூன்று பேருக்கு நோய்வந்திடுச்சு மருந்து வாங்க வேண்டும் என ஒரு கும்பிடு, ஐயகோ புலம் பெயர் தமிழர்களே ! நீங்கள் குருவி சேர்ப்பது போல் சேர்த்த பணத்தை இந்த தொப்பி மாத்திகள் எப்படி வீணாக்குகின்றார்கள் பார்த்தீர்களா.

சிறிலங்கா சோனிகளுக்கிட்ட ஒரு சூப்பர் தொப்பி இருக்கிறது. வெள்ளை பஞ்சு மிட்டாய் தொப்பி, புஸ், புஸ் என்று பஞ்சு போன்று இருக்கும். அழுக்கு பிடித்து ஊத்தையாகத்தான் அது இருக்கும். அவ்வளவு, வேதனையும், சோதனையும் அந்த தொப்பியில் மண்டியிட்டுக் கிடக்கும். அந்த வேதனைகளையெல்லாம் சுமந்து வந்து, பள்ளிவாசலுக்குள்ள உட்கார்ந்து கொண்டு சத்தம் வராமல், ஓஎன்று கதறியழுவோம். அவன் காப்பாத்துவான், காப்பாற்றினார் இனியும் அவர் எங்களை காப்பாற்றுவார். நம்மாளுகளுக்கு இந்த ராஜதந்திர மண்ணாங்கட்டி யாவாரம் எல்லாம் தெரியாது. தடாரென்று கால்ல உழுந்து காரியத்த சாதிச்சுடுவான்.

அம்பாரையில் பள்ளிவாசலில் பாங்கொலியே கேட்க கூடாது என கொஞ்சம் துடுக்குத்தனமான சிங்கள இளைஞர்கள் கூறிவிட்டார்கள். செய்தி அஸ்ரப் ஹாஜியாருக்கு றெக்கை கட்டி பறக்கிறது. அடுத்த வெள்ளிக்கிழமை காலையில் அஸ்றப் ஹாஜியார் அம்பாரை பன்சலவுக்கு போகின்றார். பெரிய ஹாமுதுறுவிடம் சுக செய்தி விசாரிக்கின்றார். அப்புறம் பன்சலவை கொஞ்சம் பெரிசாக கட்டலாமே. ஏன் வசதியி்ல்லையா என கேட்கின்றார். பெரிய ஹாமுதுறு வசதியில்லை என்கின்றார். உடனடியாக கப்பல்துறை அமைச்சூடாக வசதி செய்து கொடுக்கப்பட்டது.

அப்புறம் பெரிய ஹாமுதுறுவையும் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு பள்ளி வாசல் வருகின்றார். பள்ளி வாசலில் உட்கார்ந்து கொண்டு அளவளாவிக் கொண்டிருக்கின்றனர். பள்ளி வாசலில் உச்சஸ்தாயில் பாங்கொலி ஒலிக்கிறது. சிங்கள இளைஞர்கள் கம்பு, தடிகளுடன் ஓடி வருகின்றார்கள். லொக்கு ஹாமுதுறு பள்ளிவாசலைவிட்டு வெளியே வந்து என்ன சத்தம் என கேட்கின்றார். சிங்கள இளைஞர்கள் ஹாமுதுறுவை மண்டியிடுகின்றனர். அஸ்றப் ஹாஜியார் அன்றும் ஒரு தரம் தொப்பி மாற்றினார். அவர் மறைந்தும் அந்த பாங்கொலி இன்றும் அம்பாரை நகரெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் காக்காமாருட தொப்பி. பஞ்சு மிட்டாய் தொப்பி.

நீங்களும் மாத்துங்கோ, நன்றாக தொப்பிமாத்துங்கோ. மாற்றி, கங்கை கொண்டோம், கடாரம் வென்றோம், சிங்களத்தை கொல்வோம் என்பதை எல்லாம் விட்டு விட்டு, பாலும் தர மாட்டோம், தெளிதேனும் தரமாட்டோம், பாகும் தரமாட்டோம், பருப்பும் தரமாட்டோம், இவை ஒன்றுமே உனக்குத் தர மாட்டோம். அது எங்கள் வன்னிப் புனிதர்களுக்கு வேண்டும், ஆனால் நீ எங்களுக்கு அன்பை கற்றுத்தா, அறிவைக் கற்றுத்தா, அந்த வன்னி மக்களுக்கு நிம்மதியை பெற்றுத்தா, மகின்த ராசாவுக்கு ஒவ்வொரு நிமிடமும், தமிழன் என்றொரு இனமுண்டு, அதற்கும் இந்நாட்டில் பங்குண்டு என்ற உதிப்பை பெற்றுத்தா என தொப்பியை மாத்துங்க.

கிட்டத்தட்ட எல்லா மக்களையும் பேட்டி கண்டாயிற்று, கிளிநொச்சி தொடக்கம் புதுமாத்தளன் ஊடாக முள்ளிவாய்கால் வரையுள்ள மக்களனைவரையும் பேட்டி கண்டாயிற்று. அந்த மக்கள் தங்களூருக்கு ஓடிப்போய், அந்த சேற்றிலும், அந்த சகதியிலும், அளையவும், அலையவும் விரும்புகின்றார்கள். நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது. அன்பு எங்கின்ற மயிரைகட்டி, அந்த மலைகளை இழுத்துப்பாருங்கள். முதலில் பொருளாதார ரீதியாக அந்த மக்களை உயரப் பண்ணுங்கள். அதுதான் பழைய பல்லவிகளையெல்லாம் விட்டுப்போட்டு தொப்பியை மாத்துங்க. நீங்க தொப்பிமாத்தினா அதற்குப் பெயர் ராஜதந்திரம். பிளீஸ் ஒரே ஒரு வாட்டி மாத்துங்க. தொப்பி வாங்கலையோ ! தொப்பி.

24-06-2009


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com