Tuesday, June 30, 2009

யேமன் விமான விபத்தில் ஜந்து வயது குழந்தை உயிருடன் மீட்பு

யேமன் விமானத்தில் பயணித்த ஜந்து வயது குழந்தை ஒன்றை மீட்பு பணியாளர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். யேமன் தலைநகர் இருந்து பரிஸ் நோக்கி 150 பயணிகளுடன் பயணித்த யேமானியா ஏர்லைன்ஸ் விமானம் இந்துசமுத்திரத்தின் காமோறுஸ் தீவுகூட்டத்திற்கு அண்மையில் பறந்து கொண்டிருந்த போது விபத்திற்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் 11 பணியாளர்கள் 3 சிறுவர்கள் உட்பட 150 பயணிகள் பயணித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. விபத்து நடந்த இடத்தில் இருந்து பல சடலங்களை மீட்டதாக தெரிவித்த மீட்பு பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன் இந்த விபத்தில் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த ஜரோப்பிய ஒன்றியம், சர்வதேச தரத்திலான விமான உற்பத்தி கட்டளைகளை மீறி அமைக்கப்படும் விமானங்களில் பயணம் செய்வது பயணிகளுக்கு பாதுகாப்பற்றது எனவும், இவ்வாறான விமானங்களை கறுப்புபட்டியலில் சேர்ப்பதுடன்; இவற்றில் பயணம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் சர்வதேச பயணத்திற்கான விமான சான்றிதளை பெற்ற பின்பே விமானம் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக யேமன் விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com