Thursday, June 4, 2009

வவுனியா யாழ் தேர்தல்களுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபை மற்றும் யாழ் மாநகரசபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 18 ம் திகதியில் இருந்து 25 ம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என வவுனியா மாவட்ட மேலதிக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு பின்னர் இத்தேர்தல் இடம்பெறுவதாகவும் அந்த பத்து வருடகாலங்களில் இருதடவைகள் தேர்தலை நாடாத்த முற்பட்டபோதும் அன்றைய பாதுகாப்பு நிலைமைகளால் அவற்றை நடாத்த முடியாமல் போய்விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபைக்கான 11 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கு முகமாக 24,626 வாக்களார்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் 15 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். அவர்களில் ஆறு பேர் 19வயதுக்கும் 35 வயதுக்கும் உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பது நியதி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com