Wednesday, June 24, 2009

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு ஐம்பது லட்சம் யூரோ நிதியுதவி.

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நிவாரண உதவிகளுக்காக ஐரோப்பிய யூனியன் 5 மில்லியன் யூரோக்களை இலங்கை அரசிற்கு வழங்க முன்வந்துள்ளது. இந் நிதியானது உரியமுறையில் சம்பந்தப்பட்ட தரப்பினரை சென்றடைகின்றதா என்பதை ஐரோப்பிய நிவாரண உதவிகள் ஆணைக்குழு கண்காணிக்கும் என அக்குழுவின் ஆணையாளர் லுயிஸ் மிகேல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நிதி இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களில் நீர் வழங்கல், மலசலகூட வசதிகள், உடைகளை, சத்துணவு, குழந்தைகளுக்கான பொருட்கள், நுளம்பு வலைகள் போன்றவற்றிகு பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நிலைமைகள் கவலையளிக்கின்றது. இலங்கை மக்களின் நலனில் நாம் என்றும் அக்கறை கொண்டுள்ளதுடன் அவர்களுக்கு கைகொடுக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com