Sunday, June 7, 2009

15 சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டர்கள் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவியேற்றம்.

15 சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டர்களை பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்துவதற்கு அமச்சரவை அங்கீராரம் வழங்கியுள்ளது. மேற்படி பதவி உயர்விற்காக 33 சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டர்கள் நேர்முகப் பரீட்சைக்குத் தோன்றியிருந்தனர்.

இப் பதவியுயர்வுகளில் வவுனியா மாவட்ட நந்தன முனசிங்க, விசேட அதிரடிப்படையை சேர்ந்த ரணவண, பொலிஸ் தலமையகத்தை சேர்ந்த எச்.எஸ். தயானந்த, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த அனுற சேனாநாயக, களுத்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ரவி விஜயகுணவர்த்தன, ஓய்வு பெற்ற டி.எஸ் லுகொட, கண்டி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த டி.ஜி கமன்பில, குற்றப் பதிவுப் பிரிவை சேர்ந்த டி.ரி.என் விஜயகுணவர்த்தன, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த டபிள்யூ.எப்.யூ பெர்ணாண்டோ, யாழ் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த தயானந்த பண்டார, ஓய்வு பெற்ற யூ.என்.எஸ் ரொட்றிகோ, பொலிஸ் தலமையகத்தைச் சேர்ந்த எச். கே பினிடிய, அனுராதபுர பொலிஸ்பிரவைச் சேர்ந்த கித்சிறி தயானந்த, பொலிஸ் ஊடகப் பிரிவைச் சேர்ந்த எல். எல். சி பெரேரா, திருமலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சமறகோண் மற்றும் கொழும்பு தெற்கைச் சேர்ந்த சமரடிவகார ஆகியோரே பதவி உயர்வு பெற்றவர்களாகும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com