கரந்தெனிய பிரதேச சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக கரந்தெனிய பிரதேச சபை உறுப்பினர் சரத் குணவர்தனவை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது.
கரந்தெனிய பிரதேச சபையின் அடுத்த மாத அமர்வில் அவர் ஒரு சிறப்பு அறிக்கை வெளியிடவுள்ளதுடன் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சரத் குணவர்தன எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் கரியவாசம் கரந்தெனிய பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக கரந்தெனிய பிரதேச சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் எஸ்.ஏ. ஜெயசிங்க என்பவரே கரந்தெனிய பிரதேச சபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். முந்தைய அமர்வின் போது வெளியிட்ட அறிக்கையில் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியின் புதிய தலைவராக சரத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கரந்தெனிய பிரதேச சபையின் அடுத்த மாத அமர்வில் அவர் ஒரு சிறப்பு அறிக்கை வெளியிடவுள்ளதுடன் புதிய எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சரத் குணவர்தன எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் கரியவாசம் கரந்தெனிய பிரதேச சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக கரந்தெனிய பிரதேச சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் எஸ்.ஏ. ஜெயசிங்க என்பவரே கரந்தெனிய பிரதேச சபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். முந்தைய அமர்வின் போது வெளியிட்ட அறிக்கையில் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியின் புதிய தலைவராக சரத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment