Tuesday, June 11, 2013

ரணில் விக்கிரமசிங்க - விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல்!

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று (11) செவ்வாய்க்கிழமை பிற்பகல் சராமரியான கல்வீச்சு மற்றும் கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய - மீகெட்டுவத்தபிரதேசத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்வையிடும்போது, நூற்றுக்கணக்கானோர் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலுக்குச் சென்று கடும் காற்றுக் காரணமாக அனர்த்த்த்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்குச் சென்றபோதே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(கேஎப்)

No comments:

Post a Comment