Thursday, June 13, 2013

நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றார் அம்பிட்டியே சுமணரத்ன தேரர்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி கேவிலுக்கருகில் புத்தர் சிலை நிறுவுவதற்கு, மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மேற்கொண்ட முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து, குறித்த இடத்தில் புத்தர் சிலையை நிறுவுவது பொதுத் தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என தெரிவித்த பொலிஸார், குறித்த விடயத்தினை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதற்கிணங்க குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துடன், அது தொடர்பான வேலைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமது நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தமை தொடர்பில், மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இதுமூலமான எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment