Thursday, June 13, 2013

13 இல்லாமல் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம்! அவுஸ்ரேலிய பிரதிநிதியிடம் யாழ் ஆயர்!

13 திருத்தச் சட்டம் இல்லாமல் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என, உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அவுஸ்ரேலியாவின் தெற்காசிய நாடுகளிற்கான ஆலோசகர் மைக்கல்கில்மனிக்கிடம் யாழ் ஆயர் தோமஸ்சவுந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் தெற்காசிய நாடுகளிற்கான ஆலோசகர், மைக்கல்கில்மனிற்கும் யாழ் ஆயர் தோமஸ்சவுந்தரநாயகற்கும் இடையிலான சந்திப்பின் போதோ ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வடமாகாண சபைத்தேர்தல் நடைபெறவுள்ள இந்த சமயத்தில் 13வது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு தேர்தலை நடத்துமாறு சில கட்சிகள் வலியுறுத்திவருவது மிகுந்த கவலைக்குரி விடயம் என்றும், 13வது திருத்தச்சட்டத்தை வைத்துக்கொண்டே தேர்தலை நடத்துவதுதான் சரியாக அமையும் எனவும், தமது ஆயர்கள் சங்கமும் இதையே வலியுறுத்துவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment