Tuesday, October 6, 2009

இடைத்தங்கல் முகாம்களில் 1207 குழந்தைகள் பிரசவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இரு சிப்பாய்களை கைது.
வவுனியா இடைத்தங்கல் முகாமொன்றில் கடந்த 26ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இரு சிப்பாய்களை இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சகத்தின் செயலர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இடைத்தங்கல் முகாக்களில் உள்ள மக்களில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க இடைத்தங்கல் முகாம்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கிய பத்திரிகையாளர் மாநாட்டில், இதுவரை இடைத்தங்கல் முகாம்களில் 1207 குழந்தைகள் பிரசவித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment