Tuesday, September 29, 2009

இடைத்தங்கல் முகாம் மக்கள் தொடர்பாக பான் கீ மூன் எச்சரிக்கை.

அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் ஐ.நா சபையின் 64 வது மகாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையிலான குழுவினரை இன்று சந்தித்துப் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இடைத்தங்கல் முகாம் மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பாக இலங்கை அரசு அளித்த வாக்குறதிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பில் பிரதமருடனிருந்த குழுவில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோகித்த போகல்லாக ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment