Monday, February 10, 2014

பிள்ளையார் கோயில் வீதியை பள்ளிவாயல் வீதியாக்குவதை நிறுத்தவீர்! மக்கள் ஆர் ப்பாட்டம்!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் பன்னெடுங்காலமாக தரவைப்பிள்ளையார் கோவில் வீதி என்ற பெயர் பாவனையில் இருந்து வருகின்றது. இவ்வீதியின் பெயரை கடற்கரை பள்ளிவீதி என பெயர் மாற்றுவதற்கு கல்முனை மாநகரசபையினால் எடுக்கப்பட்டுவருகின்றது. மாநகர சபையின் இம்முயற்சிக்கு அப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும் பெயர் மாற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்நடவடிக்கை கைவிடப்படவேண்டும் என மக்கள் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியதுடன் கல்முனை தமிழ் சிவில் சமூகத்தினால் இன்று 2014.02.10 சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.










2 comments:

  1. ipo veethikku pear maatra enna avasiyam vanthathu?athu palaiya pearilayea irukkatumea?

    ReplyDelete
  2. Riyas unkala mathiri sinthanai ullavarkal muslim samukaththukku niraiya thevaippadukirathu

    ReplyDelete