Monday, August 3, 2020

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரின் அலுவலகம் தாக்குதலுக்கு ஆளாகி.. மனைவி உட்பட நால்வர் வைத்தியசாலையில்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத்திலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான டைடஸ் பெரேராவின் கிருலப்பனை அலுவலகத்திற்கே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் வேட்பாளரின் மனைவி உட்பட நான்கு பேர் காயப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு நல்குகின்ற சமூக வலைத்தளங்கள் இதுதொடர்பில் அறிவிக்கும்போது, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான கனிஷ்க சேனாநாயக்கவின் ஆதரவாளர்களினாலேயே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment