Saturday, July 25, 2020

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்குகளைப் பதியும் நாள் குறித்துத் தீர்மானம்!

கொரோனா எச்சரிக்கை காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ள நபர்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு பிரத்தியேக திகதியொன்று வழங்கப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலில் உள்ள ஆட்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி தங்களது வாக்குகளைப் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தலுக்கு ஆளாகி தனிமைப்படுத்தல்மையங்களில் உள்ள நபர்கள் அன்றைய தினம் தங்களது வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment