Wednesday, July 15, 2020

நாமல் ராஜபக்ஷ என்றோ ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி என்கிறார் ஜோன்ஸ்டன்!

நாமல் ராஜபக்ஷ எனறோ ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி என்று எதிர்வு கூறினார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து.

‘நாமல் ராஜபக்ஷ இந்நாட்டின் தலைமையை ஏற்றால், அவர் மகிந்த ராஜபக்ஷவை விடவும் அதிசிறப்பாக நாட்டைக் கட்டியெழுப்புவார் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. ‘

குருணாகல் மாவட்டத்தில் இடமபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்குதொடர்ந்து உரையாற்றுகையில்,

நான் 2010 ஆம் ஆண்டே நாமல் ராஜபக்ஷவின் திறமைகளைக் கண்ணாறக் கண்டேன். அவர் தூரநோக்குடைய ஒரு அரசியல்வாதி. எனவும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment