Friday, July 10, 2020

மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பாய்ந்தனர் மொட்டுக் கட்சிக்கு...!

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் இன்று பொதுஜன முன்னணிக்கு ஆதரவு நல்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அகுரஸ்ஸ தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய வேட்பாளருமான சந்தன பிரியந்த (பொடிகடே பிரியந்த) மற்றும் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற வேட்பாளரும் ஹக்மன கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.டப்ளிவ். பிரேமரத்ன ஆகிய இருவருமே இவ்வாறு பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கிறார்கள்.

மொட்டின் வேட்பாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவர்கள் இருவரும் மொட்டக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment