Tuesday, July 28, 2020

மூன்றில் இரண்டினைப் பெற்று நாங்களே ஆட்சி அமைப்போம்! நாமல் ராஜபக்ஷ

இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் வெற்றியின் பின்னர் மூன்றில் இரண்டு அதிகாரங்களுடன் அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும் அடிப்படைவாத அரசியல் கட்சிகளுடன் ஒன்றுசேர வேணடிய அவசியம் ஒருபோதும் கிடையாது எனவும் பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

தெரண 360 நிகழ்ச்சியில் நேற்றுக் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சென்ற அரசாங்கம் மூன்றில் இரண்டினை ஹயருக்காகவே பெற்றுக் கொண்டது. நாங்கள் மக்களின் தேவைப்பாடுகள் என்னவென்பதைத் தெரிந்து கொண்டு மக்களுக்காகவே செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment