Friday, July 17, 2020

பரீட்சைப் பெறுபேறு மீளாய்விற்கான காலாவதித் திகதி நீடிப்பு!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப்ப்படிவத்தின் காலவதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2020.07.31 ஆம் திகதி வரை பெறுபேறு மீளாய்வு செய்வதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலதிக தகவல்களுக்காக www.doenets.lk எனும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்திற்குச் செல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment