Sunday, July 12, 2020

அரசாங்கத்தின் தூரநோக்கின்மையே கொரோனா இரண்டாம் அலைக்குக் காரணம் – சஜித்

மீண்டும் இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை தலைதூக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

மாத்தறை மாவட்டம் அக்குறஸ்ஸவில் இடமபெற்ற கூட்மொன்றின்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதற்குக் காரணம் அரசாங்கத்தின் அசமந்த போக்கும் தூரநோக்கின்மையும் சீரற்ற ஆட்சி முறையுமே எனவும் குறிப்பிட்ட அவர், பொதுத் தேர்தலுக்கு முன்னர் கொரோனா வைரசு தொடர்பில் சரியான தீர்மானத்திற்கு வருமாறு தான் கேட்டுக் கொண்டதை அரசாங்கம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை எனவும், இந்த தூரநோக்கற்ற தன்மையேகொரோனா இரண்டாம் அலைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment