Thursday, July 9, 2020

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களை உடனடியாக வரவழைக்க வேண்டும்! புபுது ஜெயக்கொடி

கொரோனா ஆட்கொல்லி நோயினால் இலங்கையில் 11 பேர் இறந்தார்கள் என்று இலங்கை அரசாங்கம் மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவினால் 30 இலங்கையர்கள் இறந்துள்ளனர் என முன்னணி சோசலிஸக் கட்சி குறிப்பிடுகிறது.

இன்னும் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என முன்னணி சோசலிஸக் கட்சியின் செயலாளர் புபுது ஜெயக்கொடி குறிப்பிடுகின்றார். மத்தி கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் எனக்கோரி வௌிநாட்டலுவல்கள் அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட முன்னணி சோசலிஸக் கட்சி, பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே இவ்வாறு தெரிவித்தது.

No comments:

Post a Comment