Saturday, June 13, 2020

கோத்தாபயவுக்கு பாராளுமன்றில் அதிகாரம் வழங்காவிட்டால் தனக்கு நடந்தகதி அவருக்கும் என்கிறார் மைத்திரியார்!

ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே பாராளுமன்ற அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை வலுப்படுத்த _மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இல்லையென்றால், தனக்கு ஆட்சியில் பாராளுமன்றத்தில் நடந்த கதிபோன்றே தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் பாராளுமன்றத்தில் நடக்கும் என்பதை ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment