Wednesday, June 10, 2020

யாழில் கடற்படை உறுப்பினர்கள் இருவர் நையப்புடைப்பு

நேற்றைய தினம், யாழ்ப்பாணம் அனலைதீவுப் பிரதேசத்தில் சோதனையில் உலாவந்த இரண்டு கடற்படை வீரர்களுக்கு இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடாத்தியதில் காயமடைந்த கடற்படை வீர்ர்கள் இருவரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கைட்ஸ் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடற்படை முகாமில் பணியாற்றுகின்ற குறித்த இரு கடற்படை வீர்ர்களும் தொடர்ந்து இவ்வாறு தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அவர்கள் தேடுதலில் ஈடுபட்ட வேலையிலேயே தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடாத்தியவர்கள் பற்றி விரிவான விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment