Thursday, June 4, 2020

எதிர்வரும் 06 ஆம் திகதி தபாலகங்கள் திறக்கப்படமாட்டாது : தபால் மா அதிபர் அறிவிப்பு

நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை சேவைகள் இடமபெறாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 06 ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது என்று தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தந் தெரிவிப்பதாக தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment