20 வருடங்களின் பின்னர் இலங்கையில் வளியின் தரச்சுட்டி அதி உயர்வாக காணப்படுவதாக சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தத் தரத்தை தொடர்ந்தும் பேணிச்செல்லல் வேண்டும் என சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் முதுகுட ஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், நாளாந்தம் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை வளியின் தரம் அதிகரித்தமைக்கான பிரதான காரணம் என அவர் கூறினார்.

No comments:
Post a Comment