Wednesday, April 22, 2020

நாளை மஹிந்த - சஜித் நேருக்கு நேர் சந்திப்பு!

முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியாவின் தலைமையின் கீழ் அரசியலமைப்பு சபை நாளை (23) மதியம் 12 மணிக்கு கூட்டப்பட உள்ளது.

கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலைமப்புச் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியொருவரின் நியமனம் தொடர்பாகவே இவ்வரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளதெனத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment