Thursday, April 2, 2020

இலங்கையில் ​கொரோனா வைரசினால் நான்காவது நபர் மரணம்!

கொவிட் - 19 வைரசுத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த நான்காவது நபர் பற்றிய விபரம் சற்றுமுன் வௌியானது என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிவித்தார்.
அங்கொட ஐ.ரீ.எச்சில் சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே நேற்றிரவு குறித்த நபர் மரணமடைந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். நிவ்மோனியா அதிகரிப்பின் காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார் என அனில் ஜாசிங்கவின் பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment