Monday, March 30, 2020

எதிர்வரும் வாரங்களில் இன்னும் பல ஊர்களை மூடவேண்டிவரும்! - இராணுவத் தளபதி

நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகின்ற கொரோனா வைரசு பரவுதல் தொடர்பில் கிராமங்களை முடக்குதல் எனப்படும் லொக்டவுன் செய்ய வேண்டிவரும் என கொவிட் - 19 தடுப்பு மத்திய நிலையத்தின் முக்கியத்தரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிடுகின்றார்.

நோய்த் தொற்றுக்குள்ளானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று தலைமறைவாகி வருகின்றனர். அவர்களினால் பலரும் ஆட்கொல்லி நோய்க்கு பலியாக வேண்டிவரும். அதனால் அவ்வாறு நோய்க்கு ஆளாவதைத் தடுப்பதற்காக குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சரிவர இனங்காண்பதற்கு இந்த 'லொக்டவுன்' செய்யப்படுகின்றது எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment